இந்தியர் யாரும் இயலாதவர் அல்ல அதிலும் தமிழர் நாம் ஒன்றும் தாழ்ந்தவர் அல்ல‌

Sunday, November 28, 2010

பெண் போதை

மது போதை தீர்ந்துவிடும் சீக்கிரத்தில்
தீராதே..... மாது போதை...!

Monday, September 20, 2010

நான் தயார்

ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம்
தோல்விகளை தாங்க நான்
தயார் ..........
தோல் தர தோழன் நீ
தயாரென்றால்......

Tuesday, September 7, 2010

அழகோவியம்

விடியும்வரைத் தெரியவில்லை,
இரவெல்லாம் நான் ரசித்த
அழகோவியம்,
விளக்கொளியில் தெரிந்திட்ட
உன் நிழல்தானென்று........

Monday, September 6, 2010

கடவுள் எங்கே....?

நாம் சிறுவயதிலிருந்து கேட்கும் கதை பாட்டி வடைசுட்டகதை.. இந்த கதையில் உண்மைகள் வடையை சுட்டது யார்? பாட்டியா..? வடைசட்டியா? காகையா? இல்லை நரியா? இந்த கேள்விக்கே நமக்கு சரியான பதில் இதுவறை கிடைக்காதபோது கடவுள் யார் எங்கிருக்கிறார் என்பது எப்படி எளிதில் நமக்கு எப்படி புரியும்?
சரி பாட்டி வடைசுட்ட கதைய மொதல்ல முடிப்போம்... இந்த கதயில வடமாவ வுருட்டி போட்டதுமட்டும் தான் பாட்டி வடயசுட்டது வடசட்டி. அந்த பாட்டிடேந்துவடைய சுட்டது காக்கா காக்காடேந்து சுட்டது நரி ஆகமொத்தம் பாட்டிவடசுடவேஇல்ல ... இதுதானே உண்மை..?
கடவுள் இருக்காரா இல்லையானு நாத்திகர்ஹளுக்கும் ஆண்மீகவாதிகளுக்கும் பெரிய சொர்போரே நடந்துகிட்டிருக்கு... கடவுள் நம்பிக்கை கொண்டவர்கலாலேயும் கடவுள் இருக்காருன்னு நிரூபிக்க முடியல.. நாத்திகர்கலாலேயும் கடவுள் இல்லன்னு நிருபிக்கமுடியல..
கடவுள் நிராஹரிப்போர் கேட்கும் கேள்வி கடவுள் இல்லை இருந்தால் என் கண்முன் காட்டு என்பது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நமக்குள்ளேயும் வெளியேயும் இருக்குன்னு சொன்ன வின்கானிய என் கண்முன் காட்டினால்தான் நம்புவோம் என்று சொல்லி கல்லால் அடித்துவிரட்டிய அதே உலகதுலதான் நாம் இன்னமுன் வால்துகிட்டிருக்கோம்...
ஒரு நுன்னியிரிய கண்டுபிடிக்கவே மனிதனுக்கு பலநூறு ஆண்டுகள் தேவைப்படும்போது
கடவுளை இன்றே கண்முன் காட்ட சொல்வது புத்திசளிதனமகவும் தோன்றவில்லை..
நாத்திகவாதிகளும் உணர்கின்றார்கள் மனிதனை மிஞ்சிய ஷக்தி இருப்பதை ஆனால் ஏற்க்க மறுக்கின்றார்கள்.
ஒரு சமப்புல்வேலியில் மூன்று கன்றுகள் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். முதல் கன்று கழுத்து நெருக்க கட்டப்பட்டுள்ளது , மற்றொன்று நீண்ட கயிற்றில் கட்டப்பட்டுள்ளது , மூன்றாவது கன்று கட்டபடாமல் விடப்பட்டு உள்ளது என எடுத்துக்கொள்வோம்.
இங்குள்ள கன்றுகளை மூடநம்பிக்கை கொண்டோர் , மூடனம்பிக்கைல்லாமல் ஒரு நெறிமுறையை பின்பற்றுபவர் , கடவுள் இல்லை என்பவருடன் இணைத்துப்பார்க்கலாம்.
ஆனால் இறுதியில் வெற்றிபெற போவது நாத்திகர்ஹலோ ஆன்மீகவாதிகளோ இல்லை
விஞ்ஞானிகள் மட்டும்தான். ஏனெனில் சிந்திப்பதில் மட்டும் இல்லாமல் செயல்பாட்டில் இறங்கிவிட்டார்கள்..
இவர்கள் மனிதர்கள் தோன்ற குரங்கு காரணமென்றால் குரங்கு தோன்ற காரணம் எதுவென்று ஆராய தொடங்கிவிட்டார்கள். இந்த தேடல் தொடர்ந்தால் இந்த பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது எது அது தோன்ற காரணமானது எது என்று தெரியப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இருக்கின்றாரா இல்லையா என்பதை சொல்லபோவது நாத்கவாதியோ ஆண்மிகவாதியோ இல்லை விஞ்ஞானிகள் மட்டும்தான். விஞ்ஞானிகள் நமக்கு பதில் சொல்ல எத்தனை ஆண்டுகள் ஆகுமென்பதோ அதுவரை நாம் இருப்போம் என்பதோ நிச்சயமில்லை. எனவே அதுவரை நம் சமூகத்தினரை மூடனம்பிக்கயிலிருந்து மீட்டெடுப்பதே நம் முதல் தலையாய கடமையாகும்.

தூயவளே....

என் துடிக்கும் இதயத்தை
துடைத்து வைத்திருக்கிறேன்....
தூயவளே நீ வந்து குடியேற.....

Sunday, September 5, 2010

உளிகள்

காதலியே.....
நீ பிடிக்கவில்லை என்று சொன்ன என் இதயத்தை
சுத்தியல் கொண்டு நொறுக்கமாட்டேன்.......
உளிகள்கொண்டு செதுக்கபோகிறேன்
உனக்கு பிடித்தவண்ணம்.........

சிற்பம்

பெண்ணே....
உன்னை பார்த்த பின்புதான்
தெரிந்துகொண்டேன்.
பிரம்மன் சிற்பகலையிலும் சிறந்தவன்
என்று.....

Saturday, July 17, 2010

பெண்ணின் சிரிப்பு

அன்று அவள் மட்டும் என்னை பார்த்து
சிரிக்காமல் இருந்திருந்தால் ,..
இன்று என்னை சுற்றி யாருமே
அழுதிருக்கமாட்டார்கள்,.........

எமன்

பெண்ணே!
என் உயிர் வாங்க எமன்
எங்கே வருவான் ?
என் இல்லத்திற்கா,......?
இல்லை
உன் உள்ளத்திற்கா,.....?

தேர்வு

அருகில் இருந்தும் பேசமுடியாத,
உரமை இருந்தும் கேட்க முடியாத,
தேர்வறை போன்றதுதான்
என் காதலும்...

தண்டனை,...

என் கண்கள் செய்த சிறிய
தவறுக்காக ,
என் இதயம் அனுபவிக்கும் பெரிய
தண்டனை,
(காதல்),.....

உயிர்

பெண்ணே !
என்னையும் ஒருநாள் மரணம் தீண்டும் ,
பின்பு
என் உருவம் அழிந்துவிடலாம் ,...
என் கண்கள் தொலைத்துவிடலாம்,...
என் எலும்புகள் மக்கிவிடல்லாம்,...
என் உடல் சிதைந்து விடலாம்,...
ஆனால்
உன்மேல் நான் கொண்ட அன்பு மட்டும்
உனையே சுற்றிவரும்,
என்றாவது என்னை எண்ணிவரும்
உன் கண்ணீர் துடைக்க,.....

அவளின் பொறுமை

அவள் மிகவும் பொறுமையானவள் ..
அதனால்தான்
நான் கொடுத்த காதல் கடிதத்திற்கு ,
பதில் கொண்டுவருகிறாள் பூக்களோடு .
என் கல்லறைக்கு ,.......

தண்ணீர் பஞ்சம்

ஊரெல்லாம் தண்ணீர் பஞ்சம்,
என் கண்களை தவிர,.....

உன்னை என்னி..

அமைதியான இரவு,
வெள்ளி பூத்த வானம்,
சிரித்த முகத்துடன் நிலவு,
சிலிர்க்க வைக்கும் காற்று ,
சிதறி கிடக்கும் விண்மீன் ,
இத்தனை இருந்தும் உறக்கமில்லை,
உன்னை கண்ட என் விழிக்கு,

அதிசயம்

காதலில் வெற்றிபெற்றவனுக்கு
மனவறயாகவும்.
தோல்வியடைந்தவனுக்கு
கல்லறையாகவும்
தெரியும் தாஜ்மஹால்
உண்மையில் ஓர் அதிசயம்தான் .

கண்ணீர் கடிதம்

பிரிந்துபோன காதலனின் கண்ணீர் கவிதை...
என் இந்நாள்காதலியே!..
நான் உன் நினைவுகளுடன் வாழ
கற்றுக்கொண்டேன்,........
நீ உன் கணவனுடன் வாழ
கற்றுக்கொண்டாயா,.....
(இப்படிக்கு)
உன் முன்னால் காதலன்

மறக்க நினைக்கிறன்

பெண்ணே!
இன்று இறுதித்தேர்வு நாள் ,
தேர்வு அறையிலும் நினைவுக்கு வந்தது
படித்த பாடங்கள் இல்லை
பழகிய நினைவுகள் மட்டுமே ,
இன்றுதான் முதல் முறையாக
மறக்க நினைகிறேன்,
உன்னை அல்ல.
படித்த பாடத்தை,...........a

நட்பு

உறவுகள் பிரிந்தாலும் .
உணர்வுகள் பிரிவதில்லை.......,
நண்பர்கள் பிரிந்தாலும்,
நட்பு என்றுமே பிரிவதில்லை,....,,

Sunday, July 11, 2010

கடைசி கவிதை

அன்று
நம் இருவரை சுற்றியும் ஆயிரம்பேர்,
இருவர் அருகிலும் இசை முழங்கின,
இருவர் மீதுமே பூக்கள் தூவின,
நீயும் அமைதி சாதிக்க,
நானும் அமைதி சாதிக்க,
நீ ஏறியதோ மணவறையில்,
நான் இறங்கியதோ கல்லறையில் ......

Saturday, July 10, 2010

அடிப்படை மின்னியல்

current
  • ஒரு conductor-இல் எலெக்ட்ரான்கள் நகர்வதையே கரண்ட் என்கிறோம்.
  • இதனுடைய அலகு(unit) ampere.
  • இதை I-என்ற எழுத்தால் குறிக்கபடுகின்றது
மேலும்
  • (எல்லா பொருட்களுமே ஏலேக்டரோன்களால் ஆனவை )
voltage
  • ஒரு conductor-இல் ஏலேக்ட்ரான்ஸ் நகர தேவையான (force) விசை voltage எனப்படுகின்றது
  • இதனுடைய அலகு(unit) voltage எனப்படுகின்றது
  • இதை v-என்ற எழுத்தால் குறிக்கபடுகின்றது
மேலும்
  • மேலே கூறப்பட்ட force-ஐ வெவ்வேறு ஆற்றலில் இருந்து பெறுகின்றோம்
  • (eg) potential,hydro,thermal,geo,solar...etc
resistance
  • conductor-இல் ஏலேக்ட்ரோன்ஸ் நகர்வதை எதிர்க்கும் ஒரு விசை (force) resistance எனப்டுகின்றது
மேலும்
  • இந்த resistance-ஆனது conductor-னுடைய length அதிகரிக்கும் பொழுது அதிகரிக்கின்றது.
  • அதே வேளையில் conductor-ன் diameter (விட்டம் )-ஐ அதிகரிக்கும் பொழுது குறைகின்றது .
condutance:
  • resistance-இன் தலைகீழ் மதிப்பு conductance எனப்படும்.
capacitance:
  • capacitor -ஆனது electrical enegy- சேமிக்கும் திறனுக்கு capacitance என்று பெயர்.
  • இது c எனும் எழுதால் குறிக்க்ப்படுகின்றது.
  • இதன் அலகு(unit) farad(f)
மேலும்:
  • capacitor-இல் சேமிக்கும் energy-ஆனது capacitor-இன் இரு plate-களுக்கு இடையேயுள்ள மின்னழுத்தவேறுபாட்டிற்கு (voltage difference) நேர்விகிதத்தில் இருக்கும்.

முதல் கவிதை

தினம் தினம் நான் படிக்கும்
முதல் கவிதை நீ அனுப்பும்
காலை வணக்கம்................... .
(sms)

Friday, July 9, 2010

எனது விருப்பம்

நான் பார்த்த பார்த்ததில் பிடித்த பிடித்ததில் ரசித்த விஷயங்களை உங்களுடன் பகிர்துகொள்ள விரும்புகிறேன் .........