இந்தியர் யாரும் இயலாதவர் அல்ல அதிலும் தமிழர் நாம் ஒன்றும் தாழ்ந்தவர் அல்ல‌

Saturday, July 17, 2010

பெண்ணின் சிரிப்பு

அன்று அவள் மட்டும் என்னை பார்த்து
சிரிக்காமல் இருந்திருந்தால் ,..
இன்று என்னை சுற்றி யாருமே
அழுதிருக்கமாட்டார்கள்,.........

எமன்

பெண்ணே!
என் உயிர் வாங்க எமன்
எங்கே வருவான் ?
என் இல்லத்திற்கா,......?
இல்லை
உன் உள்ளத்திற்கா,.....?

தேர்வு

அருகில் இருந்தும் பேசமுடியாத,
உரமை இருந்தும் கேட்க முடியாத,
தேர்வறை போன்றதுதான்
என் காதலும்...

தண்டனை,...

என் கண்கள் செய்த சிறிய
தவறுக்காக ,
என் இதயம் அனுபவிக்கும் பெரிய
தண்டனை,
(காதல்),.....

உயிர்

பெண்ணே !
என்னையும் ஒருநாள் மரணம் தீண்டும் ,
பின்பு
என் உருவம் அழிந்துவிடலாம் ,...
என் கண்கள் தொலைத்துவிடலாம்,...
என் எலும்புகள் மக்கிவிடல்லாம்,...
என் உடல் சிதைந்து விடலாம்,...
ஆனால்
உன்மேல் நான் கொண்ட அன்பு மட்டும்
உனையே சுற்றிவரும்,
என்றாவது என்னை எண்ணிவரும்
உன் கண்ணீர் துடைக்க,.....

அவளின் பொறுமை

அவள் மிகவும் பொறுமையானவள் ..
அதனால்தான்
நான் கொடுத்த காதல் கடிதத்திற்கு ,
பதில் கொண்டுவருகிறாள் பூக்களோடு .
என் கல்லறைக்கு ,.......

தண்ணீர் பஞ்சம்

ஊரெல்லாம் தண்ணீர் பஞ்சம்,
என் கண்களை தவிர,.....

உன்னை என்னி..

அமைதியான இரவு,
வெள்ளி பூத்த வானம்,
சிரித்த முகத்துடன் நிலவு,
சிலிர்க்க வைக்கும் காற்று ,
சிதறி கிடக்கும் விண்மீன் ,
இத்தனை இருந்தும் உறக்கமில்லை,
உன்னை கண்ட என் விழிக்கு,

அதிசயம்

காதலில் வெற்றிபெற்றவனுக்கு
மனவறயாகவும்.
தோல்வியடைந்தவனுக்கு
கல்லறையாகவும்
தெரியும் தாஜ்மஹால்
உண்மையில் ஓர் அதிசயம்தான் .

கண்ணீர் கடிதம்

பிரிந்துபோன காதலனின் கண்ணீர் கவிதை...
என் இந்நாள்காதலியே!..
நான் உன் நினைவுகளுடன் வாழ
கற்றுக்கொண்டேன்,........
நீ உன் கணவனுடன் வாழ
கற்றுக்கொண்டாயா,.....
(இப்படிக்கு)
உன் முன்னால் காதலன்

மறக்க நினைக்கிறன்

பெண்ணே!
இன்று இறுதித்தேர்வு நாள் ,
தேர்வு அறையிலும் நினைவுக்கு வந்தது
படித்த பாடங்கள் இல்லை
பழகிய நினைவுகள் மட்டுமே ,
இன்றுதான் முதல் முறையாக
மறக்க நினைகிறேன்,
உன்னை அல்ல.
படித்த பாடத்தை,...........a

நட்பு

உறவுகள் பிரிந்தாலும் .
உணர்வுகள் பிரிவதில்லை.......,
நண்பர்கள் பிரிந்தாலும்,
நட்பு என்றுமே பிரிவதில்லை,....,,

Sunday, July 11, 2010

கடைசி கவிதை

அன்று
நம் இருவரை சுற்றியும் ஆயிரம்பேர்,
இருவர் அருகிலும் இசை முழங்கின,
இருவர் மீதுமே பூக்கள் தூவின,
நீயும் அமைதி சாதிக்க,
நானும் அமைதி சாதிக்க,
நீ ஏறியதோ மணவறையில்,
நான் இறங்கியதோ கல்லறையில் ......

Saturday, July 10, 2010

அடிப்படை மின்னியல்

current
  • ஒரு conductor-இல் எலெக்ட்ரான்கள் நகர்வதையே கரண்ட் என்கிறோம்.
  • இதனுடைய அலகு(unit) ampere.
  • இதை I-என்ற எழுத்தால் குறிக்கபடுகின்றது
மேலும்
  • (எல்லா பொருட்களுமே ஏலேக்டரோன்களால் ஆனவை )
voltage
  • ஒரு conductor-இல் ஏலேக்ட்ரான்ஸ் நகர தேவையான (force) விசை voltage எனப்படுகின்றது
  • இதனுடைய அலகு(unit) voltage எனப்படுகின்றது
  • இதை v-என்ற எழுத்தால் குறிக்கபடுகின்றது
மேலும்
  • மேலே கூறப்பட்ட force-ஐ வெவ்வேறு ஆற்றலில் இருந்து பெறுகின்றோம்
  • (eg) potential,hydro,thermal,geo,solar...etc
resistance
  • conductor-இல் ஏலேக்ட்ரோன்ஸ் நகர்வதை எதிர்க்கும் ஒரு விசை (force) resistance எனப்டுகின்றது
மேலும்
  • இந்த resistance-ஆனது conductor-னுடைய length அதிகரிக்கும் பொழுது அதிகரிக்கின்றது.
  • அதே வேளையில் conductor-ன் diameter (விட்டம் )-ஐ அதிகரிக்கும் பொழுது குறைகின்றது .
condutance:
  • resistance-இன் தலைகீழ் மதிப்பு conductance எனப்படும்.
capacitance:
  • capacitor -ஆனது electrical enegy- சேமிக்கும் திறனுக்கு capacitance என்று பெயர்.
  • இது c எனும் எழுதால் குறிக்க்ப்படுகின்றது.
  • இதன் அலகு(unit) farad(f)
மேலும்:
  • capacitor-இல் சேமிக்கும் energy-ஆனது capacitor-இன் இரு plate-களுக்கு இடையேயுள்ள மின்னழுத்தவேறுபாட்டிற்கு (voltage difference) நேர்விகிதத்தில் இருக்கும்.

முதல் கவிதை

தினம் தினம் நான் படிக்கும்
முதல் கவிதை நீ அனுப்பும்
காலை வணக்கம்................... .
(sms)

Friday, July 9, 2010

எனது விருப்பம்

நான் பார்த்த பார்த்ததில் பிடித்த பிடித்ததில் ரசித்த விஷயங்களை உங்களுடன் பகிர்துகொள்ள விரும்புகிறேன் .........